You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ‘திமுகவுடன் தேமுதிக கூட்டணி’- பிரேமலதா பேசியது என்ன?
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில், திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 19) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அவருடன் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷும் முதலமைச்சரை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "முதல்முறையாக தேமுதிக திமுகவுடன் கூட்டணி அமைத்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. இன்று முதலமைச்சரை சந்தித்து கூட்டணியை உறுதி செய்துள்ளோம். இதன் மூலம் கூட்டணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடை அளித்துவிட்டோம். இந்தக் கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும்" எனக் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு