பூஞ்ச் தாக்குதல்: அன்று தந்தை, இன்று மகன் - இரு உயிர்களை பலி கொடுத்த சோகத்தில் குடும்பம் (காணொளி)

காணொளிக் குறிப்பு, முதலில் தந்தை, இப்போது மகன் - தீவிரவாத தாக்குதலில் இறந்த ஒரே குடும்பத்து இரு உயிர்கள்
பூஞ்ச் தாக்குதல்: அன்று தந்தை, இன்று மகன் - இரு உயிர்களை பலி கொடுத்த சோகத்தில் குடும்பம் (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நேற்று ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். இதில் 4 பேர் பஞ்சாபை சேர்ந்தவர்கள்.

சில மணி நேரங்களுக்கு பின்னர், இது பயங்கரவாத தாக்குதல் என்று தெரிவித்த ராணுவம், பயங்கரவாதிகள் வீசிய கையெறி குண்டு வெடித்து வாகனம் தீ பிடித்து எரிந்தது என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த தாக்குதலில் ராஷ்ட்ரிய ரைஃபில்ஸ் பிரிவைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். இதில் உயிரிழந்த ஒரு வீரர் குடும்பத்தில் ஏற்கெனவே அவரது தந்தை கார்கில் போரில் பலியானது தெரிய வந்துள்ளது.

காஷ்மீர் தாக்குதல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: