You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா - மாலத்தீவுக்கு நடுவில் இஸ்ரேல் வருவது ஏன்? அதன் திட்டம் என்ன?
இந்திய பிரதமர் நரேந்திர மோதி குறித்து மாலத்தீவு அமைச்சர் ஒருவர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது.
மாலத்தீவு அமைச்சர் மரியம் ஷியுனா, பிரதமர் மோதி லட்சத்தீவுக்குச் சென்று வந்த பிறகு பகிர்ந்த படங்கள் குறித்து ஆட்சேபகரமான கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அவர் பிரதமர் மோதியை இஸ்ரேலின் கைப்பாவை என்று அழைத்திருந்தார்.
மாலத்தீவுக்கு இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவுகள் இல்லை. மாலத்தீவு சுதந்திரம் அடைந்த பிறகு, 1965 முதல் 1974 வரை இரு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திர உறவு இருந்தது, ஆனால் 1974 இல் அது நிறுத்தப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையே இன்றும் முழுமையான ராஜதந்திர உறவு இல்லாவிட்டாலும், மாலத்தீவுக்கு வரும் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமானது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)