You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கங்கை நதியில் இருந்து நீர் எடுக்க பல கிலோ மீட்டர் தூரம் நடந்து வரும் பெண்கள் - காணொளி
கங்கை நதியில் இருந்து நீர் எடுக்க, வட இந்திய மாநிலங்களிலிருந்து மக்கள் பல நூறு கிலோமீட்டர்கள் நடந்து செல்கின்றனர். அந்த நீரைக் காவடிகளில் எடுத்துக்கொண்டு தங்கள் கிராமங்களில் இருக்கும் கோவில்களுக்கு நடந்தே செல்கின்றனர்.
இது காவடி யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சிவ பக்தர்கள் கங்கை நீரை நிரப்பி கொண்டு செல்வதற்காக ஹரித்வார் வருகிறார்கள். இதில் ஆண்கள் மட்டுமல்லாமல் பெரும் எண்ணிக்கையில் பெண்களும் பங்கேற்கின்றனர்.
அவர்களது அனுபவத்தை அவர்களே பகிந்துகொள்கின்றனர் இந்தக் காணொளியில்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)