பாலியல் தொந்தரவு புகார்கள்: ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகள் ஏன் போராடுகிறார்கள்?
2023, ஜனவரி 18ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் மகளிர் மல்யுத்த சாம்பியன் வினேஷ் போகத் தர்ணாவில் அமர்ந்த போது விளையாட்டு உலகமே அதிர்ச்சிக்குள்ளானது.
அந்த தர்ணாவில் வினேஷ் போகத்துடன், பஜ்ரங்க பூனியா, சாக்ஷி மாலிக் ஆகிய வீராங்கனைகளும் இணைந்திருந்தனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்புத் தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் ஷரன் சிங் 10-க்கும் மேற்பட்ட மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது அவர்களின் புகார். இந்த குற்றச்சாட்டுகளை பிரிஜ் பூஷன் ஷரன்சிங் மறுத்தார்.
3 நாட்கள் நீடித்த அந்த போராட்டத்தின் விளைவாக, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் தலையீட்டின் பேரில் விசாரணைக் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. அந்த விசாரணை முடியும் வரை மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவிக்கான பொறுப்புகளில் இருந்து விலகியிருக்குமாறு பிரிஜ் பூஷன் ஷரன் சிங் கேட்டுக் கொள்ளப்பட்டார்.
விசாரணை தொடங்கி ஒன்றரை மாதங்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில், தங்களுக்கு நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் வீராங்கனைகளுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மொத்த பிரச்னையும் பழைய விவாதம் ஒன்றுக்கு புத்துயிரூட்டியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



