You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை: பற்றி எரியும் தலைநகரம் - என்ன நடக்கிறது?
மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை இன்னும் முடிந்த பாடில்லை. மொய்ரானில், வன்முறை, கொலை சம்பவங்கள் குறித்தும் விஷ்ணுபூரில் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாகவும் செய்திகள் வருகின்றன.
நாம் தற்சமயம் மோரேவில் இருக்கிறோம். இது இந்திய-மியான்மர் எல்லையில் உள்ள பகுதி. கடந்த மூன்று மாதங்களில் இந்த நகரின் நிலை என்ன இங்கு நிலவும் காட்சிகள் எப்படி இருக்கின்றன என்பதை பாருங்கள்.
இங்கு அனைத்தும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. நகரம் முழுவதும் அனேகமாகக் காலியாகியிருக்கிறது. மக்கள் வெகு சிலரே வீடுகளில் இருக்கின்றனர்.
ராணுவத்தின் நடமாட்டம் மட்டுமே பரவலாகக் காணப்படுகிறது. 24 மணி நேரமும் ராணுவ வீரர்கள் இங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்