தமிழ்நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுமா? விலை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்?

காணொளிக் குறிப்பு, தமிழ்நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுமா? விலை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்?
தமிழ்நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுமா? விலை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

இந்தியா முழுவதும் அரசியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. விலை இப்போதைக்குக் குறையாது என்கிறார்கள் நிபுணர்கள். இதற்கு காரணம் என்ன?

பாஸ்மதி அரிசி தவிர மற்ற அரிசிகளின் ஏற்றுமதியை இந்தியா தற்போது தடைசெய்திருக்கிறது. இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவரும் அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுமா? விலை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்?

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் அரிசியில் சுமார் 25 சதவீதம் மட்டுமே பாஸ்மதி அரிசி; மீதி 75 சதவீதம் வழக்கமான அரிசி எனும் நிலையில், இந்தியா மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கையால் உலகம் முழுவதுமே உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தியாவில் அரிசியின் விலை வேகமாக உயர்வதாக தற்போது நுகர்வோர் உணர்ந்தாலும், கடந்த ஓராண்டாகவே இந்தியாவில் அரிசியின் விலை தொடர்ந்து அதிரித்துக்கொண்டே வருகிறது என்பதுதான் நிதர்சனம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: