700 வயதான ஆலமரத்தை அழிவிலிருந்து மீட்ட தெலங்கானா வனத்துறையினர்
700 வயதான ஆலமரத்தை அழிவிலிருந்து மீட்ட தெலங்கானா வனத்துறையினர்
பிரசுரிக்கப்பட்டது
தெலங்கானா மாவட்டத்தில் உள்ள மஹ்பூப் நகர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது பில்லாலமாரி என்ற இந்த ஆலமரம்.
3 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் 700 வயதான இந்த ஆலமரம் மனிதர்களின் செயல்பாட்டினாலும் வயது மூப்பினாலும் அழிவைச் சந்திக்கத் துவங்கியது.
கொஞ்சம் கொஞ்சமாக முறியத்துவங்கிய இந்த ஆலமரத்தை வனத்துறையினரும் மாவட்ட நிர்வாகமும் பல்வேறு சிகிச்சைகளை வழங்கி மீட்டுள்ளது.
இந்த மீட்புப் பணிகள் சாத்தியமானது எப்படி? என்னென்ன சிகிச்சைகளை இந்த மரத்திற்கு அவர்கள் வழங்கினார்கள்? இப்போது இந்த மரம் எப்படி இருக்கிறது?
முழுமையான தகவல்கள் இந்த வீடியோவில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



