பள்ளிக்குள் புகுந்த குட்டி யானை
பள்ளிக்குள் புகுந்த குட்டி யானை
பிரசுரிக்கப்பட்டது
கேரளாவில் பள்ளிக்குள் புகுந்த குட்டி யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
வயநாட்டில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் பிறந்து சில நாட்களேயான யானைக் குட்டி ஒன்று தாயை பிரிந்த நிலையில் உள்ளே நுழைந்தது. இதையடுத்து யானை குட்டி வகுப்பறைக்குள் நுழைந்து விடுமோ என்ற அச்சத்தில் ஆசிரியர்கள் கதவை மூடியுள்ளனர்.
குட்டி யானையை போராடி பிடித்த வனத்துறையினர், அதை மீண்டும் தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.



