இரான் - இஸ்ரேல் இடையே போர் மூண்டால் இந்தியா மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

இரான் - இஸ்ரேல் இடையே போர் மூண்டால் இந்தியா மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
பிரசுரிக்கப்பட்டது

அக்டோபர் 1ஆம் தேதியன்று இரான் இஸ்ரேல் மீது பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்கியது. இஸ்ரேலை இரான் நேரடியாகத் தாக்குவது இந்த ஆண்டில் இது இரண்டாவது முறை.

ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே இருவருடைய இறப்புக்குப் பின் இரானால் நடத்தப்பட்ட முக்கியமான தாக்குதல் இது.

இரான் 181 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகவும் இத்தாக்குதலில் பாலத்தீனர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

மத்திய கிழக்கில் இரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான பகைமையின் இந்தப் புதிய கட்டம், விரைவில் முடிவுறும் எனத் தோன்றவில்லை.

இந்தத் தாக்குதலுக்குப் பின் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பழிதீர்ப்பது குறித்துப் பேசினார். “இரான் இன்று பெரிய தவறு செய்துள்ளது. அதற்கான விலையை இரான் கொடுக்க நேரிடும்” என்றார்.

இதற்கு ஒருநாளுக்கு முன்பு, செப்டம்பர் 30 அன்று, நெதன்யாகுவிடம் பேசிய பிரதமர் மோதி, “நம் உலகில் பயங்கரவாதத்திற்கு எந்த இடமும் இல்லை” எனத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நேரடி போர் ஏற்பட்டால், அது இந்தியா மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் இப்போதிருக்கும் பெரிய கேள்வி.

மேலும் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)