பூமியில் 11 கி.மீ. ஆழத்துக்கு கிணறு தோண்டும் சீனா - எதற்காக தெரியுமா?
பூமியில் 11 கி.மீ. ஆழத்துக்கு கிணறு தோண்டும் சீனா - எதற்காக தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது
பூமிக்கு அடியில் 11 கிலோ மீட்டர் ஆழத்துக்கு குழி தோண்டும் பணியை சீனா தொடங்கியுள்ளது.
இந்த துளை 10 க்கும் மேற்பட்ட பூமியின் அடுக்குகள் வழியாக சென்று பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கிரெட்டேசியஸ் காலக்கட்டத்தில் தோன்றிய அடுக்குகளை அடையும் என்று சீனாவின் அரசு செய்தி நிறுவனமான Xinhua தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் 457 நாட்களை எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆபரேட்டர்கள் 2,000 டன்களுக்கும் அதிகமான உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை இந்த திட்டத்தின்போது கையாளுவார்கள்.
பூமிக்கு அடியில் 10,000 மீட்டருக்கு மேல் தோண்டப்படவுள்ள இத்திட்டம், சீனாவின் மிகப்பெரிய குழி தோண்டுதல் திட்டமாக பார்க்கப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



