இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையால் இந்தியாவுக்குள் வந்த புதிய இனிப்புகள் - காணொளி
பஞ்சாபி உணவுகள், அதன் சுவை மற்றும் நறுமணத்திற்காக உலகம் முழுவதும் அறியப்படுகிறது. இதன் சுவை கிழக்குப் பஞ்சாப், அதாவது இந்திய பஞ்சாப் அல்லது மேற்கு பஞ்சாப், அதாவது பாகிஸ்தானிலிருந்து வந்ததாகக் கூட இருக்கலாம்.
இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை நடந்து 77 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட, இருநாட்டு மக்களாலும் விரும்பப்படும் பொதுவான சில இனிப்புகள் உள்ளன. ஒரு காலத்தில் பாகிஸ்தானில் மிகவும் பிரபலமாக இருந்த பதான்கோட்டின் சிந்தி கலகண்ட் போல.
“முன்பு நாங்கள் லாகூரில் ஒரு மிட்டாய் கடை வைத்திருந்தோம். பிரிவினைக்குப் பிறகு இந்தியா வந்த நாங்கள், 'சிந்தி கலகண்ட்' என்ற பெயரில் இந்த இனிப்பை விற்கத் தொடங்கினோம்.” என்கிறார் பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட்டில் உள்ள பனார்சி இனிப்பு கடை உரிமையாளர் பிரஷோதம் அரோரா.
முழு விவரம் காணொளியில்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



