You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேரளாவில் குண்டுவெடிப்பு: கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் நடந்தது என்ன?
கேரளாவின் களமச்சேரியில் கிறிஸ்தவ பிரிவு நடத்திய கூட்டம் ஒன்றில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் இருவர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இருக்கின்றனர்.
கிறிஸ்தவ ஜெபக்கூட்ட குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள மார்ட்டின், அதற்கு முன்னதாக தான் குண்டுவைத்தது ஏன் என்பது குறித்து விளக்கி பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், சபையுடனான கருத்து வேறுபாடு காரணமாக குண்டு வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
யெகோவாவின் சாட்சிகளின் கூட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன் அளித்த தகவல்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)