இந்தியா சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றியது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கூறுவதென்ன?

இந்தியா சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றியது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கூறுவதென்ன?
பிரசுரிக்கப்பட்டது

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ரவீந்திர ஜடேஜா 49வது ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து இந்திய அணி வெற்றி இலக்கை எட்ட உதவினார்.

துபை மைதானத்தில் நியூசிலாந்தின் 252 ரன்கள் என்ற இலக்கைத் சேஸ் செய்வது எளிதான காரியமல்ல. ஆனால் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 83 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார்.

இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்தியது. பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுத்ததால், சில போட்டிகளை துபைக்கு மாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் துபையில் விளையாடியது. இந்தியா இறுதிப் போட்டியை எட்டியதால், இறுதிப் போட்டியும் துபைக்கு மாற்றப்பட்டது. இந்தியாவின் அணுகுமுறை குறித்து பாகிஸ்தான் மக்கள் மிகுந்த கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்றது பற்றி பாகிஸ்தான் ஜாம்பவான்கள் கூறியது என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)