இந்து மதத்துடன் தலித்கள் தொடர்புபடுத்திக் கொள்வது எப்படி? அவர்களை இந்து மதம் எவ்வாறு அணுகுகிறது?
இந்து மதம் என் புரிதல் என்ற தொடரின் 3வது பகுதியாக 'தலித் அடையாளம் ஏற்பும் மறுப்பும்' என்ற இந்த காணொளியில் தலித் சமூகத்தினர் இந்து மதத்துடன் தங்களை எப்படி தொடர்படுத்திக் கொள்கிறார்கள், இந்து மதம் அவர்களை எப்படி அணுகுகிறது என்று கள ஆய்வின் மூலம் கூறுகிறது.
ஒரு சந்தர்ப்பத்தில் தலித்துகள் மீது பசு காவலர்கள் நடத்திய தாக்குதலும், மற்றொரு சந்தர்ப்பத்தில் ஒரு இஸ்லாமியர் இந்து மத பெண்ணை காதலித்ததற்காக இஸ்லாமியரை தாக்கிய தலித் இளைஞர் என இரண்டு சம்பவங்களின் மூலம் இந்து மதத்துக்கும் தலித்துகளுக்குமான தொடர்பு குறித்து விளக்குகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் 2017ம் ஆண்டு இஸ்லாமியர் ஒருவரை ஷம்புலால் தலித் இளைஞர் கொலை செய்துவிடுகிறார். அதன் பின் இஸ்லாமியர்கள் இந்து பெண்களை காதலிக்கக் கூடாது என அவர் பேசும் வீடியோ வெளியானது. அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் வாழும் பகுதியை சேர்ந்த நந்த்கிஷோர் எனும் தலித் சமூகத்தை சேர்ந்தவர், பல ஆண்டுகளாக ஆர் எஸ் எஸ் அமைப்புடன் இயங்கி வருகிறார். இந்து பெண்ணை இஸ்லாமியர் திருமணம் செய்துக் கொள்வதை நந்தகிஷோர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் சங் பரிவாரங்கள் யாருக்கும் பாகுபாடு காட்டவில்லை என்கிறார்.
காங்கிரஸ் கட்சிக்கே பாரம்பரியமாக வாக்களித்து வரும் தனது தலித் சமூகத்தினரிடையே தான் கொண்டுள்ள கருத்தின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டதாகவும், பின் நிலைமைகள் சீராகின என்றும் கூறினார்.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



