சென்னையில் பொது கழிவறை குழாய் அமைக்க எதிர்ப்பு: சாதி வேறுபாடு காரணமா?
சென்னை எண்ணூர் அருகே தாழங்குப்பம் பகுதியில் உள்ள தலித் குடியிருப்புக்கான பொது கழிவறையில் புதிதாக கழிவுநீர் குழாய் பொருத்துவதற்கு மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சாதிரீதியாக எதிர்ப்பு தெரிவிப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின.
தாழங்குப்பத்தின் பின்புறத்தில் உள்ள நெட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மாற்று சமூக மக்கள் புதிய குழாய் அமைப்பதைத் தடுக்க சுவர் எழுப்பியுள்ளதாகவும் படங்கள் வெளியாகின.

உண்மையில், சாதிரீதியான காரணங்களுக்காக கழிவுநீர் குழாய் அமைப்பது தடுக்கப்படுகிறதா, குழாய் அமைப்பதைத் தடுக்க சுவர் கட்டப்பட்டதா என்று தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் நேரடியாகச் சென்று அங்கு கள ஆய்வு நடத்தியது.
தாழங்குப்பம் என்பது 150 தலித் குடும்பங்கள் வசிக்கும் பகுதி. இங்குள்ள சில வீடுகளில் தனி கழிவறைகள் உள்ளன. ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பொது கழிவறையைப் பயன்படுத்துகிறார்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



