You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பொன்முடி: அன்று அதிமுக தொடர்ந்த வழக்கு; இன்று அமலாக்கத்துறை சோதனை
பொன்முடி: அன்று அதிமுக தொடர்ந்த வழக்கு; இன்று அமலாக்கத்துறை சோதனை
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை திங்கள்கிழமை தனது சோதனைகளை தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சென்னை, விழுப்புரம் உட்பட நான்கு இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.
துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையின் ஏழு அதிகாரிகள் இந்த சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சோதனைக்கான காரணங்கள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை.
எனினும், 2012ம் ஆண்டு பதியப்பட்ட செம்மண் குவாரி குறித்த வழக்குகள் உடன் தொடர்புடையதாக இந்த சோதனைகள் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்