ஊட்டி மலைப்பாதையில் சுற்றுலா பேருந்து விழுந்தது எப்படி? என்ன நடந்தது?

ஊட்டி மலைப்பாதையில் சுற்றுலா பேருந்து விழுந்தது எப்படி? என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையில் 59 பயணிகளுடன் சென்ற சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 9 பேர் பலியாகியுள்ளனர்.

இதில், படுகாயமடைந்த இருவர் கோவை அரச மருத்துவமனையிலும், லேசான காயமடைந்த 42 பேர் குன்னூர் அரசு மருத்துமவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியிலிருந்து 57 பயணிகள் மற்றும் இரண்டு ஓட்டுநர்கள் என மொத்தம் 59 பேர் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

ஊட்டியை சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருக்கையில், குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 9வது கொண்டை ஊசி வளைவில் பேருந்தை திருப்ப முயன்றபோது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்புச் சுவரில் மோதி நிற்காமல், 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)