You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இலங்கையில் சுமார் 1000 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து
இலங்கையின் பதுளை - எல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன், 18 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து செப்டெம்பர் 4-ம் தேதி இரவு 09 மணியளவில் இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
வெல்லவாயவை நோக்கி பயணித்த பஸ், எதிர் திசையில் வந்த ஜீப் ரக வாகனமொன்றில் மோதியதை அடுத்து, கட்டுப்பாட்டை இழந்த பஸ், சுமார் 1000 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் 30-க்கும் அதிகமானோர் பயணித்த நிலையில் மீட்பு பணிக்கு சென்றவர்களில் இருவர் பள்ளத்தில் விழுந்து காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.