நாடே பிரதமர் மோதி மீது நம்பிக்கை இழந்துவிட்டது - திருமாவளவன் பேச்சு

காணொளிக் குறிப்பு, நாடே பிரதமர் மீது நம்பிக்கை இழந்துவிட்டது - திருமாவளவன் பேச்சு
நாடே பிரதமர் மோதி மீது நம்பிக்கை இழந்துவிட்டது - திருமாவளவன் பேச்சு
பிரசுரிக்கப்பட்டது

பிரதமர் மீது நாடே நம்பிக்கை இழந்து விட்டதால் அவர் பதவி விலக வேண்டும் என்று வி.சி.க. தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய அவர், எதிர்க்கட்சிகள் சார்பில் மணிப்பூரில் நேரில் கண்டு வந்தவை என்ன என்று விவரித்தார்.

குடிமக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருக்கும் நிலை அதிர்ச்சி தருவதாகவும், நாட்டைக் காத்த ராணுவ வீரர் தனது மனைவியை காக்க முடியாமல் போய்விட்டதாக வேதனைப்பட்டது வேறு எங்கும் காண முடியாத ஒன்று என்றும் அவர் கூறினார்.

திருமாவளவன் பேச்சு

பட மூலாதாரம், Loksabha TV

படக்குறிப்பு, திருமாவளவன், வி.சி.க. தலைவர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: