You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
38 வயது காவலர் அம்மாவுடன் எஸ்ஐ தேர்வுக்கு தயாராகும் 21 வயது மகள்
தெலங்கானாவின் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலத்தில் உள்ள சென்னாரம் கிராமத்தைச் சேர்ந்த 38 வயது பெண் காவலர் நாகமணியும், அவரது 21 வயது மகள் தொள்ளா திரிலோகினியும் காவல் உதவி ஆய்வாளர் பணி தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற அந்த தேர்வில் உடல் தகுதித் தேர்வில் இருவரும் தேர்ச்சி பெற்றதுடன் எழுத்துத் தேர்வுக்கும் தகுதி பெற்றுள்ளனர்.
2007ஆம் ஆண்டில் தெலங்கானா காவல் துறையில் ஊர்க்காவல் படையில் சேர்ந்த நாகமணி, பின்னர் காவலராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்.
இவரும் மகளும் ஒரே நேரத்தில் எஸ்ஐ பணி தேர்வுக்கு தயாராகி வரும் அனுபவத்தை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்