விண்வெளி: ராக்கெட் செங்குத்தாக ஏவப்படுவது ஏன்?

காணொளிக் குறிப்பு,
விண்வெளி: ராக்கெட் செங்குத்தாக ஏவப்படுவது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

செயற்கைக்கோள்கள், விண்வெளி, விண்வெளி வீரர்கள் என இந்த சொற்களைக் கேட்டாலே நினைவுக்கு வருவது விண்ணில் பாயும் ராக்கெட்டுகள் தான். இஸ்ரோ, நாசா போன்ற விண்வெளி மையங்கள் தங்களது செயற்கைக்கோள்களை ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்துவதை பலமுறை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம்.

இந்த ராக்கெட்டுகள் செங்குத்தாக விண்ணில் ஏவப்படும். அப்போது செலவழிக்கப்படும் பெரும் ஆற்றலின் காரணமாக, நெருப்பைக் கக்கிக்கொண்டு அவை விண்ணில் பாய்வதைக் காணலாம். ஆனால் செங்குத்தாக ஏவப்படும் ராக்கெட் சிறிது தூரத்திற்கு பிறகு, சாய்வாகச் சென்று, விண்வெளியில் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும்.

விண்வெளி வீரர்களை சுமந்துசெல்லும் விண்கலங்களைக் கொண்டு செல்லும் ராக்கெட்டுகளும் செங்குத்தாகவே ஏவப்பட்டு பின்னர் சாய்வாகச் சென்று, விண்வெளியில் ஒரு சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.

ஆனால் இந்த விண்கலங்கள் பூமிக்குத் திரும்பும்போது, ஒரு விமானம் போலவே தரையிறங்கும். அப்படி இருக்க ராக்கெட் செங்குத்தாக ஏவப்படுவது ஏன்? அவ்வாறு ஏவுவதன் பயன்கள் என்ன? செங்குத்தாக சென்று, பிறகு சாய்வாகச் செல்வதற்கு பதிலாக, சாய்வு நிலையிலேயே ராக்கெட்டை ஏவினால் என்னவாகும்? விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்  (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)