இந்தியர்கள் வெளிநாட்டில் இருந்து எவ்வளவு தங்கம் கொண்டு வர முடியும்?

காணொளிக் குறிப்பு, இந்தியர்கள் வெளிநாட்டில் இருந்து எவ்வளவு தங்கம் கொண்டு வர முடியும்?
இந்தியர்கள் வெளிநாட்டில் இருந்து எவ்வளவு தங்கம் கொண்டு வர முடியும்?
பிரசுரிக்கப்பட்டது

வளைகுடா நாடுகளில் இருந்து குறிப்பாக துபையில் இருந்து ரகசியமாக தங்கம் கொண்டு வரப்படும் செய்திகளை இந்திய ஊடகங்களில் அடிக்கடி பார்க்க முடிகிறது. கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ரன்யா ராவ் துபையில் இருந்து 14.8 கிலோ தங்கத்தை எடுத்து வந்தபோது வருவாய் புலனாய்வு துறையினரால் செவ்வாய்க்கிழமை (மார்ச் 04) கைது செய்யப்பட்டார்.

அதன் மதிப்பு சுமார் 12 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. பெங்களூருவின் கெம்பகெளடா சர்வதேச விமான நிலையத்தில் ரன்யா ராவ் தங்கத்துடன் பிடிபட்டார்.

முன்னதாக 2020 ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஒரு தூதரக பார்சலில் இருந்து 14.82 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோகிராம் எடையுள்ள (66 பவுண்டுகள்) 24 காரட் தங்கத்தை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் கைப்பற்றியது.

இதையடுத்து கேரள அரசியலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் எம்.சிவசங்கரின் பெயர் இந்த கடத்தலில் அடிபட்டது. இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து ஏன் தங்கம் கொண்டு வருகிறார்கள்? அவர்கள் எவ்வளவு தங்கம் கொண்டுவர முடியும்?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)