"நான் அனுபவித்த பாலியல் கொடுமைகளுக்கு எதிராக 15வயதில் குரல் கொடுத்தேன்" - மனம் திறந்த குஷ்பு

"நான் அனுபவித்த பாலியல் கொடுமைகளுக்கு எதிராக 15வயதில் குரல் கொடுத்தேன்" - மனம் திறந்த குஷ்பு
பிரசுரிக்கப்பட்டது

"சிறு வயதில் எனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளியே பேசிய பிறகு, இத்தனை ஆண்டுகளாக மனதில் இருந்த பெரும் பாரத்தைக் கீழே இறக்கி வைத்தது போல ஒரு நிம்மதி கிடைத்திருக்கிறது" என்கிறார் குஷ்பு.

தன்னுடைய எட்டு வயதில் தனது சொந்த தந்தையால் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியதாகவும், ஆனால் அந்த வயதில் அவருக்கு எதிராக அப்போது தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை எனவும், சமீபத்தில் தான் பங்குபெற்ற ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார் நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு.

இது குறித்து பிபிசியிடம் பேசிய அவர், "ஒரு சிறுமியாக என் மீது நான் கொண்ட தன்னம்பிக்கையின் பொருட்டு, தைரியத்தை வர வைத்துக் கொண்டு என்னுடைய 15 வயதில் அவரை எதிர்த்தேன். ஒரு பெண்ணாக வீட்டிலிருக்கும் ஓர் ஆணை எதிர்க்கும் துணிவு வந்துவிட்டால் இந்த உலகத்திலும் நம்மால் எதையும் எளிதாக எதிர்கொள்ள முடியும் " என்று கூறுகிறார் குஷ்பு.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: