வங்கதேசம்: புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டும், முடங்கியுள்ள உச்ச நீதிமன்றம்- காரணம் என்ன?
வங்கதேசத்தில் மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் பெரிதாகி, லட்சக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்தது மட்டுமல்லாமல், தனது சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து, வங்கதேசத்தின் புதிய இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன், வங்கதேசத்தின் தலைமை நீதிபதி பதவி விலக வேண்டுமென உச்ச நீதிமன்றம் முன்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டுவிட்டாலும் நாட்டின் உச்ச நீதிமன்றம் முடங்கியுள்ளது.
அதுகுறித்து இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



