You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யுக்ரேன் போர்: ரஷ்யாவிடம் ஆயுதங்கள் தீர்ந்துவிட்டதா?
யுக்ரேன் மீது அடுத்தடுத்த தொடர் தாக்குதல்களை ரஷ்யா நடத்திய நிலையில், ரஷ்யாவுக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக சில பாதுகாப்பு வல்லுநர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய நாட்களில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்களை அதிகப்படுத்தியிருந்தது. இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் குறித்து தற்போது பல கேள்விகள் எழுந்துள்ளன.
தரை இலக்குகளைத் தாக்குவதற்கு, தரையிலிருந்து வான் நோக்கிப் பாயும் ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்துவதை ஆயுதப் பற்றாக்குறையின் அறிகுறியாக பாதுகாப்பு வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
"சமீபத்திய தாக்குதல்களில் தரை இலக்குகளுக்கு எதிராகப் பல்வேறு ஏவுகணைகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருப்பது கவனிக்கத்தக்க விஷயம்," என்கிறார் சர்வதேச வியூக ஆய்வுகள் நிறுவனத்தின் ராணுவ நிபுணரான டக்ளஸ் பாரி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்